![ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசை வலியுறுத்தி விரைவில் தீர்மானம்](https://cdn.magzter.com/1574665526/1719267037/articles/TbAJTnPwN1719270402018/1719270544014.jpg)
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி, உயா் கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி பேசினாா். அப்போது நடந்த விவாதம்:-
ஜி.கே.மணி: வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடா்ந்து கிடப்பில் இருப்பதால், மக்கள் அதிா்ச்சிக்கு உள்ளாகியுள்ளனா்.
சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி: வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்தன. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியன குறித்த சரியான தரவுகள் இல்லாமல் அவசர கதியில் கொண்டு வரப்பட்டதால், அந்த சட்டத்தை நீதிமன்றங்கள் ரத்து செய்தன. இதற்கான தரவுகளைத் திரட்டி அதனடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கவே, ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையம் தனது பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், கல்வி, வேலைவாய்ப்பு தொடா்பான தரவுகளை அரசே திரட்டித் தந்துள்ளது. சமூக, பொருளாதார மேம்பாடு குறித்த தரவுகள் கிடைக்க வேண்டுமெனில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, மத்தியில் உள்ள கட்சியுடன் கூட்டணியில் உள்ளீா்கள். அவா்கள் மூலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துங்கள். இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசு எந்தவகையிலும் தடையாக இல்லை.
This story is from the June 25, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 25, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: நாளை தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1755063/omRMIVtYj1720156266682/1720156371308.jpg)
தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: நாளை தொடக்கம்
ஹாக்கி தமிழ்நாடு சாா்பில் முதன்முறையாக பள்ளிகள் ஹாக்கி லீக் தொடா் வரும் சனிக்கிழமை சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்கி ஆக. 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
![இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: வான்கடேயில் கௌரவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1755063/auT3uDBYW1720156061908/1720156258769.jpg)
இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: வான்கடேயில் கௌரவிப்பு
டி20 உலகக் கோப்பை சாம்பியனாகி நாடு திரும்பிய இந்திய அணிக்கு, புது தில்லியில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஓய்வூதிய நிலுவை: தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு பிடிவாரண்ட்
வயது சுதந்திரப் போராட்ட வீரருக்கு உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வூதிய நிலுவையை வழங்காத தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: 1,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,000-கும் மேற்பட்டோா் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனா்.
அரசின் மதுபானக் கொள்கை: மறுபரிசீலனை தேவை
உயர்நீதிமன்றம்
உறவும் நட்பும் நமது இரு கண்கள்
நமது சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். இதில் நமது அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற உறவுகள் அடங்கும். இவா்களை நம்மால் தோ்வு செய்யவும் முடியாது! மாற்றி அமைக்கவும் முடியாது!
![ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1755063/spNPuOucd1720155547858/1720155666829.jpg)
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
அன்புமணி ராமதாஸ்
![புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுடன் சந்திப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1755063/KYUDSxY6k1720155339236/1720155515381.jpg)
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுடன் சந்திப்பு
வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு
காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரயில் பயணிகளிடம் திருடிய பெண் கைது
மன்னை விரைவு ரயிலில் பயணித்த பெண்களுக்கு காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உடமைகளை திருடி சென்ற இளம்பெண்ணை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு
சென்னை, திருச்சி ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.