ஜார்க்கண்டில் இரண்டாவது கட்டமாக 38 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சுமார் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. இவ்விரு பேரவைத் தேர்தல்களும் பரவலாக அமைதியான முறையில் நடைபெற்றன.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் மொத்த வாக்காளர்கள் 9.70 கோடி பேர் (ஆண்கள் - 5 கோடி, பெண்கள் - 4.69 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 6,101). இவர்கள் வாக்களிக்க வசதியாக 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
113 வயது மூதாட்டி வாக்களிப்பு: இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மும்பையில் 113 வயது மூதாட்டி காஞ்சன்பென் நந்த்கிஷோர் பத்ஷா, 103 வயது சுதந்திரப் போராட்ட வீரர் ஜி.ஜி.பரிக் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
பார்லிமெண்ட் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியை சூறையாடிய அடையாளம் தெரியாத நபர்கள், தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சித் தொண்டர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
This story is from the November 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேர் கட்சியிலிருந்து விலகல்
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், தேர்தலில் வாய்ப்பளிக்காததால் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 7 பேர் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
வாக்குப்பதிவு மையங்களின் விடியோ பதிவுகளை பாதுகாக்க வேண்டும்
வாக்குப்பதிவு மையங்களில் பதிவான விடியோ காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருமலையில் ரத சப்தமி: பிப். 3 முதல் நேரடி தரிசன டோக்கன் நிறுத்தம்
திருமலையில் பிப். 4-இல் ரத சப்தமியை முன்னிட்டு 3 முதல் 5-ஆம் தேதி வரை நேரடி தரிசன டோக்கன்கள் வழங்குவது நிறுத்தப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார்.
தக்கார் நியமன விவகாரம்: நித்யானந்தா மேல்முறையீடு தள்ளுபடி
மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கருப்புப் பெட்டிகள் மீட்பு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டருடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், சம்பவ இடத்திலிருந்து இதுவரை 40-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தேசிய விளையாட்டுப் போட்டிகள்: அஜித்துக்கு 'ஹாட்ரிக்' தங்கம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை, பளுதூக்குதல், நீச்சல் ஆகிய பிரிவுகளில் பதக்கங்கள் கிடைத்தன.
‘லிவ்-இன்’ உறவை பதிவு செய்ய வலைதளம்
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்செக்ஸ் 741 புள்ளிகள் உயர்வு
பங்குச்சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் 'காளை' ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.
ஜகபர் அலி உடலை தோண்டியெடுத்து 'எக்ஸ்ரே' எடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலியின் உடல், நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் முழுமையாக 'எக்ஸ்ரே' எடுக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல்: ரூ.1,700 கோடி செலவு செய்த பாஜக
2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தேர்தலுக்கு ரூ.1,737.68 கோடியை பாஜக செலவு செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செலவின அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.