![சம்பந்தன் விட்டுச் செல்லும் இடைவெளி](https://cdn.magzter.com/1576149266/1719875482/articles/0VOccHObI1719897288812/1719897704190.jpg)
தான் தலைவராக இருந்த காலத்தில் கால ஓட்டத்திற்கு ஏற்ப தமிழர்களுக்காகத் தேசிய அரசியலை நடத்திச் சென்றார்.
தனக்குப் பிறகு தமிழரசுக் கட்சி மரபு விழுமியங்களுக்கேற்ப பொருத்தமானதொரு தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தமிழர் அரசியல் அரங்கில் அறிமுகப்படுத்தியவராக சம்பந்தன் இருக்கிறார்.
அதே நேரத்தில், 2009 மேயுடன் யுத்தம் மௌனித்தபின் சர்வதேச உறவுகள், பூகோள அரசியல் யதார்த்தங்களைக் கருத்திலெடுத்து தளிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்து சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்குத் தயார் என பிரகடனப்படுத்திக் கொண்டார். அதற்காகவே தொடர்ந்தும் செயற்பட்டும் வந்தார்.
அதே நேரம், புலிகளின் காலத்தில் மோசமான தமிழ்- முஸ்லீம் உறவுகளை மேம்படுத்தும் வகையில், கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக நசீர் அகமட்டை நியமிப்பதற்கு ஆதரவு கொடுத்தார். அதனால், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சி முஸ்லிம்களுக்குத் தேவையற்ற வகையில் ஆதரவு வழங்குவதாக விமர்சனத்தினையும் சம்பாதித்துக் கொண்டது இருந்தாலும், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு கிழக்கு மாகாணத்தில் அதிகரித்தது என்றே கூறவேண்டும். இருப்பினும் கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக விவகாரம் உள்ளிட்ட விடயங்களில் முஸ்லிம்கள் தங்கள் நிலையிலிருந்து இறங்கவில்லை என்பது வேறுகதை 91 வயதான இராஜவரோதயம் சம்பந்தன் 5 பெப்ரவரி 1933இல் திருமலையில் பிறந்தார். சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர்.
இரா.சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி,மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று.இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.
1977ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினரானார்.
1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (த.வி.கூ) பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.
This story is from the July 02, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 02, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![புதிய ஈரான் ஜனாதிபதியாக சூக் பெசஸ்கியான்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/bCT5RNrvi1720418483769/1720418512561.jpg)
புதிய ஈரான் ஜனாதிபதியாக சூக் பெசஸ்கியான்
ஈரான் ஜனாதிபதித் தேர்தலில், மருத்துவரும், நீண்டகாலம் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியுள்ள, சீர்திருத்தங்களுக்கு ஆதரவாளரான 69 வயதான மசூத் பெசஸ்கியான் வெற்றி பெற்றுள்ளார்.
![எல்.பி.எல்.தம்புள்ள சிக்ஸர்ஸை வீழ்த்திய ஜஃப்னா கிங்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/LJS70s1ee1720418424258/1720418471910.jpg)
எல்.பி.எல்.தம்புள்ள சிக்ஸர்ஸை வீழ்த்திய ஜஃப்னா கிங்ஸ்
லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), தம்புள்ளயில் சனிக்கிழமை (06) நடைபெற்ற தம்புள்ள சிக்ஸர்ஸுடனான போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் வென்றது.
“அல்ஹாஜ் எம்.எம்.இக்பாலின் மறைவு புத்தளம் மண்ணுக்கு பேரிழப்பு"
“சமூகங்களின் இணக்கப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் முன்நின்று செயல்படக்கூடிய ஒரு சிறந்த மனிதரை புத்தளம் சமூகம் இழந்திருக்கின்றது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
![இன் ஆராய்கிறது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/EKPSt9Olx1720418269235/1720418334203.jpg)
இன் ஆராய்கிறது
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை உயர்நீதிமன்றம்
கனடா பறக்க முயன்ற யாழ். இளைஞன் கைது
போலியான இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை இளைஞர் ஒருவர் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்.
![ஐயாவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/x39NG6xzP1720417979550/1720418115271.jpg)
ஐயாவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் பூதவுடல், அக்கினியுடன், ஞாயிற்றுக்கிழமை (08) மாலை சங்கமமானது.
![78 வயதான் பெண் படுகொலை: பாடசாலை மாணவன் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/Dl6d3-Ha71720417860359/1720417970935.jpg)
78 வயதான் பெண் படுகொலை: பாடசாலை மாணவன் கைது
பலாங்கொடையில் 78 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
![மனோவுக்கு எதிராக மலையகத்தில் ஆர்ப்பாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/LQM_zO0IM1720417763296/1720417846648.jpg)
மனோவுக்கு எதிராக மலையகத்தில் ஆர்ப்பாட்டம்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மலையகத்தில் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (08) போராட்டங்கள் நடத்தப்பட்டன.
![“இந்தி படமொன்றை பார்த்ததை போன்று கோரக்காட்சிகள் இருந்தன"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/Y29njcJ_p1720417631448/1720417751082.jpg)
“இந்தி படமொன்றை பார்த்ததை போன்று கோரக்காட்சிகள் இருந்தன"
பதுளை-தன்னபங்குவ வீதியில் வெலிஹிந்த பிரதேசத்தில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற லொறி விபத்தில் நால்வர் உயிரிழந்து மூவரை வைத்தியசாலைக்கு அனுப்பிய கோரமான காட்சியை நேரில் பார்த்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சாரதி கே.டி.நாலக சுரவீர ஒரு இந்தி படத்தைப் பார்த்ததைப் போல இருந்தது என விபரித்துள்ளார்.
!["தேர்தலை பிற்போட ஜனாதிபதி முயற்சி”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/ws11p1UuQ1720417555833/1720417608749.jpg)
"தேர்தலை பிற்போட ஜனாதிபதி முயற்சி”
தேர்தலை எவ்வாறேனும் பிற்போடவே தற்போதைய ஜனாதிபதி முயற்சிக்கிறார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.