சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த ஆபாச நடிகை கஸ்தூரி, ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி ரகுபதி ராஜா உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நடிகை கஸ்தூரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், மதுரை மற்றும் கோவை போலீசார் அடுத்தடுத்து வழக்குகளில் கஸ்தூரியை கைது செய்து விசாரணை நடத்த தயாராகி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே சமூகப் பாதுகாப்பு கோரி பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு 18 நிமிடங்கள் பேசினார். அப்போது தெலுங்கு சமுதாய பெண்கள் குறித்து அவதூறாக பேசி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இது தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் படி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 192, 196(1),(ஏ), 353(1)(பி) மற்றும் 353(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் போலீசாரின் கைதுக்கு பயந்து நடிகை கஸ்தூரி தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார். அதேநேரம் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நியைத்தில் அளித்த புகாரின்படி, நடிகை கஸ்தூரி மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதேபோல் கோவை மாநகர காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் மீதும் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே நடிகை கஸ்தூரி எந்த நேரத்திலும் போலீசார் தம்மை கைது செய்யலாம் என கருதி முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
This story is from the November 18, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 18, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மாமல்லபுரத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு 90.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு
கோயம்பேடு மார்க்கெட்டில் நிறுத்தி இருந்த காரை திருடி ஊர் சுற்றிய வாலிபர்
கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (52). இவர், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
டிசம்பர் 11ம் தேதி அண்ணாசாலையில் ரூ.20 லட்சம் பறித்த விவகாரம் சிறையில் உள்ள சிறப்பு எஸ்ஐக்கள் சன்னி லாய்டு.ராஜா சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
வீட்டில் நடந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் | தலைமறைவாக உள்ள 2 வணிகவரித்துறை அதிகாரிகளை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு
திருவொற்றியூர், எண்ணூர் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்
கடல் வாழ் ஆமைகளில் அரிய வகை உயிரினமான ஆலிவ் ரிட்லி ஆமைகள், ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரைகளை நோக்கி வரும்.
வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு தேவி எல்லம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் தேவி எல்லம்மன் கோயில் உள்ளது.
நான் படித்த பள்ளியிலேயே சீஃப் கெஸ்ட்...
கண்கலங்கிய சிவகார்த்திகேயன்
திருத்தணியில் தவெக மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார்.
அண்ணா நினைவு தின மவுன ஊர்வலம் மெரினா பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மவுன ஊர்வலம் நடைபெறுவதால், மெரினா பகுதியில் இன்று காலை முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாதக-தபெதிகவினர் மோதல்
வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 51 பேர் மீது வழக்கு
தமிழிசை கடும் காட்டம் ‘ஒர்க் பிரம் ஹோம்' விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது
ஒர்க் பிரம் ஹோம் மற்றும் இணையதளத்தில்தான் பணி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நடிகர் விஜயால் எதுவும் செய்ய முடியாது” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.