அடுத்த சில நாட்களில் பேனர் கழற்றப்பட்டது மேலும் பரபரப்பாகியது. பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் 74,69,325 ரூபாய் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்து முதலிடத்திலிருப்பது ஆகாஷ் ஹோட்டல் முத்துகிருஷ்ணன். 22,11,557 ரூபாய் பாக்கியோடு இரண்டாமிடத்தில் அகர்வால் ஸ்வீட்ஸ் ஏழுமலை. மூன்றாமிடத்தில் ஃபைவ் ஸ்டார் பிரியாணி அசேன்பாஷா 21,78,084 ரூபாய் பாக்கி. இதில், திருவண்ணாமலை தி.மு.க. தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் விஜயரங்கனின் ப்ரியா ஹோட்டல் பாக்கி 19.50 லட்சம். அ.தி.மு.க. மாநகர கவுன்சிலர் அஸ்வினி ஹோட்டல் நரேஷ் 7.88 லட்சம் என வரிசையாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடில்லாமல் வாடகை பாக்கி வைத்துள்ள 23 பேர்களின் பெயர்களை பேனரில் குறிப்பிட்டது மாநகராட்சி நிர்வாகம். மொத்த பாக்கி 3.35 கோடி! இவர்களுக்கு கடந்த 2024, மே மாதம் முதல் கடந்த ஜனவரி 2ஆம் தேதி வரை 5 முறை நோட்டீஸ் தந்தும் வாடகை செலுத்தவில்லையாம். வாடகை செலுத்தவில்லை என்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், மறுஏலம் விடப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்பிறகு தான் இந்த பேனர் நடவடிக்கை.
This story is from the January 25-28,2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 25-28,2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சீமான் வீட்டில் உருட்டுக்கட்டை குண்டர்கள்! போராடிய பெரியாரிஸ்டுகள்!
“ஹலோ தலைவரே, தந்தை பெரியாரைத் தொடர்ந்து விமர்சித்துவரும் சீமானால் தமிழகம் முழுக்க ஒருவித பதட்டம் ஏற்பட்டு வருகிறது.”
ஆக்கிரமிப்பு! -தி.மு.க. மா.செ. மீது குற்றச்சாட்டு!
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், நிதி நிறுவன ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரமும், அவரது மகன் ஒன்றிய செயலாளர் முத்துச் செல்வனும் மாநகராட்சி நிர்வாகத்தை மிரட்டி வருவதாக செய்திகள் இறக்கையடித்துப் பறக்கின்றன.
"காலனி வீட்லதான் வசிக்கிறோம்” -எம்.எல்.ஏ. தோழர் சின்னத்துரை பேட்டி!
தமிழ்நாட்டில் 35 ஆண்டு களுக்கு முன்பு அரசாங்கம் கட்டிக் கொடுத்த, மேற்கூரை உடைந்து கொட் டும் காலனி வீட்டில் மிக எளிமையாக, எம்.எல்.ஏ.க்களிலேயே முன்னுதாரண மாக வாழ்ந்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கந்தர்வக் கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னத்துரையை அவரது வீட்டில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்..
ஆம் ஆத்மியின்'ஜாட்' வியூகம்! தடுமாறும் பா.ஐ.க.!
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் டெல்லி தேர்தல் வெற்றிக்காக வாள் சுழற்றத் தொடங்கியுள் ளன. டெல்லியின் தலைமை பீடத்தை அதிக முறை அலங்கரித்த கட்சி காங்கிரஸ் என்றாலும், ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின் காங்கிரஸ் டெல்லியில் வீழ்ச்சிப் பாதையில் இருக்கிறது. இழக்க எதுவுமில்லை என்பதால், கிடைத்த வரை ஆதாயம் என களத்தில் மும்முரம் காட்டுகிறது.
ட்ரம்ப் அதிரடி! பாதகமா? சாதகமா?
‘புலி வருது... புலி வருது' கதையாக... உண்மையிலேயே புலி வந்து விட்டது. ஆம்! அதிரடிக்குப் பெயர்போன டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ஜனவரி 20, திங்கள்கிழமை மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, தனது அதிரடிகளை முதல் நாளிலேயே தொடங்கிவிட்டார்.
இவளுக்கு மரண தண்டனை!அவனுக்கு ஆயுள் தண்டனை!-தீர்ப்பின் பின்னணி!
சமீபத்தில் வெளியான இரு தீர்ப்புகள் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளன. ஒரு வழக்கில், உயிருக்குயிராய் நேசித்த காதல னுக்கு கசாயத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலைசெய்த காதலிக்கு கேரள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாவலி பதில்கள்
'கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது... அதற்கு ஆதாரமும் உள்ளது' என்ற ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் கருத்தில் மாவலிக்கு உடன்பாடு உண்டா?
விஷால் சென்டிமெண்ட்!
கௌதம்மேனன், அஜய் ஞானமுத்து, சுந்தர்.சி.ஆகியோருடன் அடுத்தடுத்து படம் பண்ண கமிட்டாகியுள்ளார் விஷால்.
திருப்பரங்குன்றம் தர்கா சிக்கல்!
நேர்த்திக் கடனுக்கு நெருக்கடி தரும் இந்து முன்னணி!