'கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை! அமெரிக்காவின் இறையாண்மையை காப்பாற்றி, வலுவான அமெரிக்காவை கட்டமைப்போம்!' என்ற கோஷத்தின் அடிப்படையில் தான் ட்ரம்ப் இரண்டாவது முறையாகத் தனது 78வது வயதில் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்திலேயே ஸ்ட்ரிக்ட் ஆபீஸராக செயல்பட்டதால், அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
குறிப்பாக, அமெரிக்காவுக்குள் அண்டை நாடுகளின் வழியாக சட்டவிரோதமாக ஊடுருவுவதைத் தடுப்பதற்கு பிரமாண்ட பாதுகாப்பு அரண்களை அமைத்தார். அந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி, பேசுபொருளானது. அமெரிக்கவாழ் வெளிநாட்டினர்களின் வேலைவாய்ப்பு விஷயத்தில் சட்டத்தை கடுமையாக்கப்போவதாக அறிவித்திருந்தார். தற்போது பதவியேற்ற முதல் நாளிலேயே அது தொடர்பான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்! தங்கள் நாடுகளில் ஏற்படும் உள்நாட்டுப் பிரச்சனைகள், போர்கள் காரணமாக அகதிகளாக அமெரிக்காவுக்குள் மெக்ஸிகோ வழியாக, அமெரிக்காவுக்குள் தஞ்சமடையக் கோருபவர்கள், தங்கள் மீதான வழக்குகள் முடியும் வரை மெக்ஸிகோவில் காத்திருக்க வேண்டுமென்று அறிவித்துள்ளார். ட்ரம்பின் முந்தைய ஆட்சிக்காலத்திலும் இதுபோலவே தான் அவர் அறிவித்திருந்தார்.
அடுத்ததாக பைடனின் ஆட்சிக்காலத்தில், மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் தஞ்சமடைய நினைப்பவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்பின் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் பொய்யான தகவலைக் கொடுத்து நுழைந்திருப்பது தெரியவந்தால் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால் அதற்குள் ஓரிரு ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்திருப்பார்கள். அப்படி வசிப்பவர்களில், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாக இருக்கும்பட்சத்தில், அது அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஆபத்தாகக்கூடும். எனவே அவர்களை அமெரிக்காவுக்குள் நுழையவிடாமல், மெக்ஸிகோவில் காத்திருக்கவைத்து, முழுமையான விசாரணைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். மெக்ஸிகோவிலிருந்து சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுப்பதற்காக அமெரிக்காவின் தென்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
This story is from the January 25-28,2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 25-28,2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சீமான் வீட்டில் உருட்டுக்கட்டை குண்டர்கள்! போராடிய பெரியாரிஸ்டுகள்!
“ஹலோ தலைவரே, தந்தை பெரியாரைத் தொடர்ந்து விமர்சித்துவரும் சீமானால் தமிழகம் முழுக்க ஒருவித பதட்டம் ஏற்பட்டு வருகிறது.”
ஆக்கிரமிப்பு! -தி.மு.க. மா.செ. மீது குற்றச்சாட்டு!
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், நிதி நிறுவன ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரமும், அவரது மகன் ஒன்றிய செயலாளர் முத்துச் செல்வனும் மாநகராட்சி நிர்வாகத்தை மிரட்டி வருவதாக செய்திகள் இறக்கையடித்துப் பறக்கின்றன.
"காலனி வீட்லதான் வசிக்கிறோம்” -எம்.எல்.ஏ. தோழர் சின்னத்துரை பேட்டி!
தமிழ்நாட்டில் 35 ஆண்டு களுக்கு முன்பு அரசாங்கம் கட்டிக் கொடுத்த, மேற்கூரை உடைந்து கொட் டும் காலனி வீட்டில் மிக எளிமையாக, எம்.எல்.ஏ.க்களிலேயே முன்னுதாரண மாக வாழ்ந்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கந்தர்வக் கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னத்துரையை அவரது வீட்டில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்..
ஆம் ஆத்மியின்'ஜாட்' வியூகம்! தடுமாறும் பா.ஐ.க.!
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் டெல்லி தேர்தல் வெற்றிக்காக வாள் சுழற்றத் தொடங்கியுள் ளன. டெல்லியின் தலைமை பீடத்தை அதிக முறை அலங்கரித்த கட்சி காங்கிரஸ் என்றாலும், ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின் காங்கிரஸ் டெல்லியில் வீழ்ச்சிப் பாதையில் இருக்கிறது. இழக்க எதுவுமில்லை என்பதால், கிடைத்த வரை ஆதாயம் என களத்தில் மும்முரம் காட்டுகிறது.
வாடகை பாக்கி மாநகராட்சியின் பலே பேனர் ஐடியா !
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு சொந்தமாக மத்திய பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் அதிக வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் விவரத்தை பேருந்து நிலையத்தின் முன்பாக பேனராக வைத்து அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்!
இவளுக்கு மரண தண்டனை!அவனுக்கு ஆயுள் தண்டனை!-தீர்ப்பின் பின்னணி!
சமீபத்தில் வெளியான இரு தீர்ப்புகள் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளன. ஒரு வழக்கில், உயிருக்குயிராய் நேசித்த காதல னுக்கு கசாயத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலைசெய்த காதலிக்கு கேரள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாவலி பதில்கள்
'கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது... அதற்கு ஆதாரமும் உள்ளது' என்ற ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் கருத்தில் மாவலிக்கு உடன்பாடு உண்டா?
விஷால் சென்டிமெண்ட்!
கௌதம்மேனன், அஜய் ஞானமுத்து, சுந்தர்.சி.ஆகியோருடன் அடுத்தடுத்து படம் பண்ண கமிட்டாகியுள்ளார் விஷால்.
திருப்பரங்குன்றம் தர்கா சிக்கல்!
நேர்த்திக் கடனுக்கு நெருக்கடி தரும் இந்து முன்னணி!