“ஆமாம்பா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் வரம்பு மீறிய விமர்சனங்களைக் கண்டித்து அவர் வீட்டின் முன் முற்றுகைப் போராட்டம் நடந்திருக்கிறதே?”
“உண்மைதாங்க தலைவரே, தந்தை பெரியாரை வரம்பு மீறி தொடர்ந்து விமர்சித்து வருகிறார் சீமான். அவருக்கு எதிராக எழும் கண்டனங்களை அவர் பொருட்படுத்தவே இல்லை. திராவிட இயக்கச் சிந்தனைகளை உயர்த்திப் பிடிக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மே-17 இயக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திராவிட இயக்கங்கள், 22ஆம் தேதி சீமானைக் கண்டிக்கும் விதமாய் அவரது நீலாங்கரை வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இதனால் முதல்நாள் இரவே நாம் தமிழர் கட்சி தொண்டர்களும், குண்டர்களும் சீமான் வீட்டில் குவிந்தனர். அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகள் இருந்தன. இதனால் அந்த ஏரியாவே பதட்டப் பரபரப்பில் மூழ்கியது. குவிக்கப்பட்டிருந்த அடியாட்களுக்காக சீமான் வீட்டில் சுடச்சுட கோழிக்கறி பிரியாணி தயார் செய்து தொண்டர்களுடன் சீமானும் அவரது மனைவியும் சிரித்தபடி சாப்பிட்டுக்கொண்டே கேமராவுக்குப் போஸ் கொடுத்தனர். மறுபுறம் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்துடன் பாட்டு கச்சேரி நடத்திக்கொண்டிருந்தார்கள்.”
“ஆமாம்பா, காட்சி ஊடகங்களில் அதையெல்லாம் காட்டினார்களே? அடுத்து நடந்ததைச் சொல்லு.”
“அறிவித்தபடியே திராவிட இயக்க உணர்வாளர்கள் சீமான் வீட்டருகே சென்று அவரைக் கண்டித்து முழக்கமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் கலந்துகொண்டு தங்கள் ஆவேசத்தை எதிரொலித்தனர். அப்போது சிலர் சீமான் படத்தை செருப்பால் அடித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்புகளை ஆவேசமாக வெளிப்படுத்தினர். அவர்களை எதிர்த்து சீமானின் அடியாட்கள் ஆவேசமாகக் குரல் கொடுத்தனர். இதனால் அடுத்த என்ன நடக்குமோ என்கிற பதட்டம் அங்கு நிலவியது. பெருமளவில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் காவல்துறை, சீமானை எதிர்த்துப் போராடியவர்களை மட்டும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தியது. குண்டர்’த் தடிகளோடு குவிந்திருந்த அடியாட்களை அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. இடைவிடாத கூச்சலும் எதிர்ப்புக் குரல்கள், ஆர்ப்பாட்டமும் அப்படியே நீடித்தன. எதிர்க்கட்சிகள், பத்திரிக்கையாளர்கள்
This story is from the January 25-28,2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 25-28,2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஆக்கிரமிப்பு! -தி.மு.க. மா.செ. மீது குற்றச்சாட்டு!
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், நிதி நிறுவன ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரமும், அவரது மகன் ஒன்றிய செயலாளர் முத்துச் செல்வனும் மாநகராட்சி நிர்வாகத்தை மிரட்டி வருவதாக செய்திகள் இறக்கையடித்துப் பறக்கின்றன.
"காலனி வீட்லதான் வசிக்கிறோம்” -எம்.எல்.ஏ. தோழர் சின்னத்துரை பேட்டி!
தமிழ்நாட்டில் 35 ஆண்டு களுக்கு முன்பு அரசாங்கம் கட்டிக் கொடுத்த, மேற்கூரை உடைந்து கொட் டும் காலனி வீட்டில் மிக எளிமையாக, எம்.எல்.ஏ.க்களிலேயே முன்னுதாரண மாக வாழ்ந்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கந்தர்வக் கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னத்துரையை அவரது வீட்டில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்..
ஆம் ஆத்மியின்'ஜாட்' வியூகம்! தடுமாறும் பா.ஐ.க.!
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் டெல்லி தேர்தல் வெற்றிக்காக வாள் சுழற்றத் தொடங்கியுள் ளன. டெல்லியின் தலைமை பீடத்தை அதிக முறை அலங்கரித்த கட்சி காங்கிரஸ் என்றாலும், ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின் காங்கிரஸ் டெல்லியில் வீழ்ச்சிப் பாதையில் இருக்கிறது. இழக்க எதுவுமில்லை என்பதால், கிடைத்த வரை ஆதாயம் என களத்தில் மும்முரம் காட்டுகிறது.
ட்ரம்ப் அதிரடி! பாதகமா? சாதகமா?
‘புலி வருது... புலி வருது' கதையாக... உண்மையிலேயே புலி வந்து விட்டது. ஆம்! அதிரடிக்குப் பெயர்போன டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ஜனவரி 20, திங்கள்கிழமை மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, தனது அதிரடிகளை முதல் நாளிலேயே தொடங்கிவிட்டார்.
வாடகை பாக்கி மாநகராட்சியின் பலே பேனர் ஐடியா !
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு சொந்தமாக மத்திய பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் அதிக வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் விவரத்தை பேருந்து நிலையத்தின் முன்பாக பேனராக வைத்து அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்!
இவளுக்கு மரண தண்டனை!அவனுக்கு ஆயுள் தண்டனை!-தீர்ப்பின் பின்னணி!
சமீபத்தில் வெளியான இரு தீர்ப்புகள் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளன. ஒரு வழக்கில், உயிருக்குயிராய் நேசித்த காதல னுக்கு கசாயத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலைசெய்த காதலிக்கு கேரள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாவலி பதில்கள்
'கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது... அதற்கு ஆதாரமும் உள்ளது' என்ற ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் கருத்தில் மாவலிக்கு உடன்பாடு உண்டா?
விஷால் சென்டிமெண்ட்!
கௌதம்மேனன், அஜய் ஞானமுத்து, சுந்தர்.சி.ஆகியோருடன் அடுத்தடுத்து படம் பண்ண கமிட்டாகியுள்ளார் விஷால்.
திருப்பரங்குன்றம் தர்கா சிக்கல்!
நேர்த்திக் கடனுக்கு நெருக்கடி தரும் இந்து முன்னணி!