CATEGORIES
Categories
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேர் கட்சியிலிருந்து விலகல்
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், தேர்தலில் வாய்ப்பளிக்காததால் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 7 பேர் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
வாக்குப்பதிவு மையங்களின் விடியோ பதிவுகளை பாதுகாக்க வேண்டும்
வாக்குப்பதிவு மையங்களில் பதிவான விடியோ காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருமலையில் ரத சப்தமி: பிப். 3 முதல் நேரடி தரிசன டோக்கன் நிறுத்தம்
திருமலையில் பிப். 4-இல் ரத சப்தமியை முன்னிட்டு 3 முதல் 5-ஆம் தேதி வரை நேரடி தரிசன டோக்கன்கள் வழங்குவது நிறுத்தப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார்.
தக்கார் நியமன விவகாரம்: நித்யானந்தா மேல்முறையீடு தள்ளுபடி
மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கருப்புப் பெட்டிகள் மீட்பு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டருடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், சம்பவ இடத்திலிருந்து இதுவரை 40-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தேசிய விளையாட்டுப் போட்டிகள்: அஜித்துக்கு 'ஹாட்ரிக்' தங்கம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை, பளுதூக்குதல், நீச்சல் ஆகிய பிரிவுகளில் பதக்கங்கள் கிடைத்தன.
‘லிவ்-இன்’ உறவை பதிவு செய்ய வலைதளம்
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்செக்ஸ் 741 புள்ளிகள் உயர்வு
பங்குச்சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் 'காளை' ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.
ஜகபர் அலி உடலை தோண்டியெடுத்து 'எக்ஸ்ரே' எடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலியின் உடல், நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் முழுமையாக 'எக்ஸ்ரே' எடுக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல்: ரூ.1,700 கோடி செலவு செய்த பாஜக
2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தேர்தலுக்கு ரூ.1,737.68 கோடியை பாஜக செலவு செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செலவின அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
'என் இனிய பொன் நிலாவே...' பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை
என் இனிய பொன் நிலாவே... எனத் தொடங்கும் தமிழ்த் திரைப்படப் பாடலுக்கான காப்புரிமையை 'சரிகம இந்தியா' நிறுவனம் கொண்டிருப்பதாகவும், அந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா அதை மூன்றாம் தரப்புக்கு வழங்க முடியாது என்றும் தில்லி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
சதுப்பு நிலங்களுக்கு சாகா வரம் வேண்டும்!
நீர் வளத்தையும் நில வளத்தையும் மேம்படுத்துதல், மாசுபாட்டை குறைத்தல், உயிரிப் பன்மய வளத்தைக் காத்தல், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல் என எண்ணற்ற பலன்களை சதுப்புநிலங்கள் அளிக்கின்றன.
விண்வெளி நடை: சுனிதா வில்லியம்ஸ் சாதனை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
658 சிறப்பு மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 658 சிறப்பு மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பெரியார் மீதான விமர்சனங்கள்; பெரிதுபடுத்த தயாரில்லை
பெரியாரை மரியாதைக்குறைவாகப் பேசக்கூடியவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை; அதனால், அந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவும் தயாராக இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
வளர்ந்த பாரதத்துக்கு வழிகாட்டும் குடியரசுத் தலைவர் உரை
வளர்ந்த பாரதத்துக்கு வழிகாட்டும் உரையாக குடியரசுத் தலைவரின் உரை அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து குழப்பம் விளைவிக்காத முதல் கூட்டத் தொடர்
2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடாளுமன்ற கூடுவதற்கு முன்பு இந்தியாவில் குழப்பத்தை விளைவிக்க வெளி நாட்டிலிருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாதது இதுவே முதல் முறை என்று எண்ணுகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
குற்றப்பத்திரிகை தாமத விவகாரம் தமிழக உள்துறைச் செயலர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்
புலன் விசாரணை முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது குறித்து விளக்கம் அளிப்பதற்காக தமிழக உள்துறைச் செயலர் தீரஜ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
பாம்பன் புதிய பாலம்: ரயில், கப்பலை இயக்கி சோதனை
பாம்பன் புதிய பாலத்தில் ரயிலையும், இந்தப் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து இரும்பு கர்டரை மேலே தூக்கி கப்பலையும் இயக்கி வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப் பொருளே காரணம்
பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணமாக உள்ளது என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
தபால்தலை சேகரிக்கும் இயக்கம் தேவை
தபால்தலை சேகரிக்கும் இயக்கம் தேவை என தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் சென்ற பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூன்றாவது ஆட்சியில் மும்மடங்கு வேகம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
‘டீப்சீக்'குக்கு தடை விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்
தங்களது அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான 'டீப்சீக்'கை தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.
எளிய வணிகம் 2.0-க்கு அழைப்பு: ஜிஎஸ்டி 2.0 தவிர்ப்பு
பொருளாதார ஆய்வறிக்கை மீது காங்கிரஸ் விமர்சனம்
போராட்ட அனுமதி கோரும் அவகாசத்தை நீட்டிக்க சட்டத் திருத்தம்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்கான பணிகள் தீவிரம்
வெளியுறவு அமைச்சகம்
கும்பமேளா நெரிசல்: நீதிக் குழு விசாரணை தொடக்கம்
மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு அமைத்த நீதிக் குழு, பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை விசாரணையைத் தொடங்கியது.
இலங்கைத் தமிழர் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்
அதிபர் அநுரகுமார திசாநாயக உறுதி